அருவியின் அழகே அது ஆர்ப்பரித்துக்கொட்டுவதில் தான் இருக்கிறது.
_*யாரும் நம்பவில்லை*_ _*என்பதற்காக*_
_*நீங்கள் வலிமை*_ _*இழந்தவர்களாக*_
_*மாறிப்போய்*_ _*இருக்கிறீர்கள்.*_
_நிழலுக்கு தான்_ _உருவம்_ _வேண்டும்_
_நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும்._
_*உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால் யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ ,*_
_*அவர்கள் கடந்து*_ _*போகட்டும்*_ _*என்று*_
_*தள்ளியே இருங்கள்.*_
_நெருப்பு தொட்டால் சுடும் என்பது_
_அவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை._
_*உங்கள் உண்மை*_ _*யாருடைய*_
_*இதயங்களையெல்லாம்*_ _*காயப்படுத்துகிறதோ,*_
_*அங்கே நீங்கள் மருந்திட*_
_*வேண்டிய அவசியமில்லை.*_
_*சில இடங்களில் தனிமை மட்டும் தான்*_
_*தன்மானத்தோடு வாழ வைக்கும்.*_
_உங்கள் முன்னேற்றத்தை கண்டு_
_யாரெல்லாம் பழிக்கிறார்களோ,_
_அவர்கள் அன்னார்ந்து பார்க்கும் இடத்தில்_
_நீங்கள் பறந்து கொண்டிருக்கிறீர்கள்_
_என்பது தான் உண்மை._
_*ஒருவரின் புறக்கணிப்பு.*_
_*ஒருவருடைய ஏமாற்றம்.*_
_*ஒருவருடைய தவறு.*_
_*ஒருவரது நம்பிக்கை துரோகம்.*_
_*என்று ஒவ்வொன்றாய் கடந்த பின்*_
_*கடைசியில் திரும்பிப்*_ _*பார்க்கும் பொழுது*_
_*எல்லோரும் எங்கோ நின்று கொண்டிருப்பார்கள்.*_
_கூட்டமாய் மேயும் ஆடுகளாய் வாழ்வதைவிட,_
_தனித்து வாழும் சிங்கமாய்_
_வாழ்ந்து விடுவது சிறப்பானது._
_*நீங்கள் அழுவதாய் இருந்தால் அழுது விடுங்கள்.*_
_*கோபம் வந்தால் கோபப்பட்டு விடுங்கள்.*_
_*ஆத்திரம் தீரும் வரை*_ _*வேண்டுமானால்*_
_*சப்தம் போட்டு*_ _*விடுங்கள்.*_
_*அமைதியாய் மட்டும் இருந்து விடாதீர்கள்.*_
_அருவியின் அழகே அது_ _ஆர்ப்பரித்துக்_
_கொட்டுவதில் தான் இருக்கிறது._
_*நம்பிக்கை நிறைந்த*_ _*மனிதர்கள்*_
_*எவரிடத்திலும் மண்டியிடுவதும் இல்லை.*_
_*பிச்சை கேட்பதும் இல்லை.*_
_*அது உணவாக இருந்தாலும் சரி.*_
_*உண்மையான அன்பாக இருந்தாலும் சரி.*_
_சிந்தித்து செயலாற்றுங்கள்._
Comments
Post a Comment