Posts

Showing posts from August, 2020

எதுவும் கைகொடுக்காது

ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.... ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க.... தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த

பலர் மனதில் வாழ வைக்கும்

'எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை' - இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார். இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய்விட்டு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது. மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள். சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதால் அவரை தொடர்ச்சியாக பார்த்து வந்தேன். ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்க தொடங்கிய காலம் அது. அவர் முன்னாளில் எப்

எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார்  ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார். சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார். மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது. அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் . பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார். அதுவும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கப்பல் வியாபாரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம்

நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

Image
கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும். ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும். கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்தது விடும். உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள். மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள். நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நன்றி

தோல்வியை கண்டு துவண்டு போககூடாது... முயற்சி செய்தால் வெற்றி நமதே...

அருமையான விடியோ.... click here

Usain

click here

எதுவெல்லாம்கெடும்

#முன்னோர்களின்_அருள்வாக்கு..!!! பாராத பயிரும் கெடும் பாசத்தினால் பிள்ளை கெடும் கேளாத கடனும் கெடும் கேட்கும்போது உறவு கெடும் தேடாத செல்வம் கெடும் தெகிட்டினால் விருந்து கெடும் ஓதாத கல்வி கெடும் ஒழுக்கமில்லா வாழ்வு கெடும் சேராத உறவும் கெடும் சிற்றின்பன் பெயரும் கெடும் நாடாத நட்பும் கெடும் நயமில்லா சொல்லும் கெடும் கண்டிக்காத பிள்ளை கெடும் கடன்பட்டால் வாழ்வு கெடும் பிரிவால் இன்பம் கெடும் பணத்தால் அமைதி கெடும் சினமிகுந்தால் அறமும் கெடும் சிந்திக்காத செயலும் கெடும்.. சோம்பினால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் மோகித்தால் முறைமை கெடும் முறையற்ற உறவும் கெடும் அச்சத்தால் வீரம் கெடும் அறியாமையால் முடிவு கெடும் உழுவாத நிலமும் கெடும் உழைக்காத உடலும்  கெடும் இறைக்காத கிணறும் கெடும் இயற்கையழிக்கும் நாடும் கெடும் இல்லாலில்லா வம்சம் கெடும் இரக்கமில்லா மனிதம் கெடும் தோகையினால் துறவு கெடும் துணையில்லா வாழ்வு கெடும் ஓய்வில்லா முதுமை கெடும் ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும் அளவில்லா ஆசை கெடும் அச்சப்படும் கோழை கெடும் இலக்கில்லா பயணம் கெடும் இச்சையினால் உள்ளம் கெடும் உண்மையில்லா காதல் கெடும் உணர்வில்லாத இனம

9th std mathematics subject -definitions

Image
1.கணம் நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு கணம் எனப்படும் 2.கணத்தை குறிப்பிடும் முறைகள்: * விவரித்தல் முறை * கணக்கட்டமைப்பு முறை * பட்டியல் முறை 2.கணங்களின் வகைகள் * வெற்றுக் கணம் * ஓர் உறுப்பு கணம் * முடிவுறு கணம் * முடிவுறாக் கணம் * சமான கணங்கள்    * சம கணங்கள்      * அனைத்துக் கணம்      * உட்கணம்      * தகு உட்கணம்       * வெட்டாக் கணங்கள்      * அடுக்குக் கணம் Unit 2: மெய்யெண்கள் 1. விகிதமுறு எண்கள்         ஒரு விகிதமுறு எண் என்பது இரு முழுக்களின் பின்ன வடிவத்தின் ஈவு ஆகும்.  இதைப் பூச்சியத்தால் வகுத்தலை மட்டும் தவிர்க்க வேண்டும். 2. விகிதமுறா எண்கள்        இரு முழுக்களை விகிதமாக எழுத இயலாத எண்களே விகிதமுறா எண்கள் ஆகும். 3. முடிவுறு தசம எண்கள்        வகுத்தல் செயலானது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தசம வடிவில் முடிவுறும். இவை முடிவுறு  தசம எண்கள் எனப்படும். 4. மெய்யெண்கள்         அனைத்து விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களையும் உள்ளடக்கியது மெய்யெண்கள் ஆகும். 5. முறுடுகள்        முறுடு என்பது ஒரு விகிதமுறு எண்ணின்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Image