Posts

Showing posts from April, 2021

உளவியல் முறைகள் -Methods of PsychologyTet Qns Ans

 

வளர்ச்சியும் முன்னேற்றமும்-TET வினா விடை

 

கல்வி உளவியல் வினா விடை

 

National civil services day

|| தேசிய குடிமை பணிகள் தினம் || 👉 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21ஆம் தேதி தேசிய குடிமை பணிகள் தினம் (அ) சிவில் சேவை தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 👉 நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ். (நிர்வாகம்), ஐ.பி.எஸ். (காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

திருக்குறளில் உழவின் பெருமை

 உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!! #உழவு - #உழவின்பெருமை: குறள் வரிசை 1031 1032 1033 1034 1035 1036 1037 1038 1039 1040 குறள்:1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. குறள் விளக்கம்: உலகத்தவர் பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் உணவின் பொருட்டு உழவரையே எதிர்பார்பர்; ஆகையால், எவ்வளவுதான் துன்பம் அடைந்தாலும் உழவே தலையாய தொழில். குறள்:1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. குறள் விளக்கம்: உழவுத்தொழிலைச் செய்யாமல் பிறதொழில்களின் மேல் செல்கின்றவர்களையெல்லாம் தாங்குதலால், உழவர்களே உலகத்தவராகிய தேருக்கு அச்சாணி போன்றவராவர். குறள்:1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். குறள் விளக்கம்: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. குறள்:1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். குறள் விளக்கம்: உழுதலால் தானிய வளம் உடைய உழவர், உலகம் முழுவதிலுமுள்ள பல அரசர் நாட்டையும் தமது அரசரின் குடைக்கீழாகக் கா