இன்று காலை Jogging சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 200 மீட்டரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 20 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரை கடந்தும் விட்டேன். எனக்குள் " அவரை கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அவருடன் போட்டி போட்டது கூட தெரியாது. நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை..... 1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை... 2. என்...